பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள், வட வரும் அச்செய்யுளின கத்து இடையே தோன்றிய அவ்விரங் கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவ சாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விசங்கற்பொ ருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்ல தூஉம், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறும் போதெல்லாம் இடையிடையே தலைவிமாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனந் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்த லொழுக்கமாதல் இல்லை என் பதூஉம் 'அகநானூறு, கலித்தொகை' முதலிய பண்டை நூல்களினெல்லாங் காணக்கிடத்தலின் இம்முல்லைப்பாட்டி னிடையே வந்த அவ் அடிபற்றி ஈண்டைக்காவதோர் குற்ற மில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளா யிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியும் தலைவி இரங் குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும் நெய்த லொழுக்கமாம் என்பது சொல்லாசிரியர் நூல்களிற் காண்க. ஆற்ற விப்பார் உள்வழியெல்லாம் நிகழும் ஆற் றாமை நெய்தல்' ஆவ தில்லையாகலின், இப்பாட்டின் கண் ணும் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையேவைத்து மொழியப்பட்டதாகலின், அது நெய்தற் றினை யாதல் ஒரு சிறி "பும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக. பருவரல். - மனத்தடுமாற்றம். எவ்வம் - வருத்தம். மா யோள் - வெளிறித் தளுக் காகமளிருங் கரியநிறம் உடைய வள்; "மாயோள் முன்கை யாய்தொடி என்னும் பொரு நராற்றுப்படை யடியுரையிலும் இப்பொரு - 'ள காண்க. புலம் பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண் ணீர்த்துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் " புலம்பேதனிமை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.