பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. (உச உஅ ) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத் தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக்காட்டி லே பிடவஞ்செடிகளையும் பசிய தூ றுகளையும் வெட்டி, அங் குள்ள வேடரின் காவற்கோட்டைகளையும் அழித்து, முள்ளா லே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க இங்கே நண்பர் திருச்சிற்றம்பலம் பிள்ளையவர்கள் தாம் எழுதிய முல்லைப் பாட்டு விளக்கவுரையில் பகையரசன் பாடி வீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச்சென்ற வேந்தன் பாடி வீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறை வருணிப்பு இதன் கட் சொல்லப்பட்டதெனக் கொண்டு சில எழுதினார் கள். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலா தல் அங்ஙனம் இருவகைப்பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரை என்க. கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டாறு பொ ருந்திய அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண் நாறு - நெடுந் தூரம் மணங்கமழும்; இவ்வடை மொழியைப் பைம்புதல்' என்பதனோடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - வெட்டி. புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை. 'இடுமுட்புரி சை' முள் இடுபுரிசை என மாற்றுக; புரிசை - மதில். 'ஏமம் உ.று, ஈறு குறைந்து ஏமுறு எனவாயிற்று; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி - திரையொலிக்கின்ற கடல். (". க.ந. சு) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்தில் காவலாக நின்ற மதயானை, கரும் போடுக திரும் நெருங்கக்கட்டிய அதிமதுரத்தழையினை உண் ணாமல், அவற்றால் தனது நெற்றியைத் துடைத்துக் கொம்பி லே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்ற தாக, பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற்கூறிக் கவளம் ஊட்ட என்க. உவலைக்கூரை - தழைகள் வேய்ந்த கூரை; கூடாரத்தில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழை