பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள். யோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடி வீட்டின் கண் எல்லாரும் தொழில விதற்குத் தெரிகுறியாக அடித்து விட்ட மணி யென் றுரைப்பினும் அமையும். 'புத்த ஆடு அதி மற்கொடி' எனச்சொற்களை மாறிக்கூட்டுக. படார் - சிறு தூறு. 2 சர் - திவலை. துகில் முடித்துப் போர்த்த - கூறை (யால் !மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக்கொண்ட; இச்சொற் றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது. ஒ ங்குநடைப் பெருமூ தாளர் - மக்க கல்லொழுக்கத்தினையும் டைய மெய்காப்பாளர்; தம்மரசர்க்குப் பகையாவார் செய்யும்

  1. மறுத்தல்களுக்கு இடங்கொடாது தம்மரசர்:பாட்டு மெய்யொ

ழுக்கமுடையராதல் பற்றி 'ஒங்குதடை' யுடையாரெனச்சிறந் தெடுத்துக் கூறினார்; 'பெருமூ தாளார்' என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின் எனைக்காவல் றொழிலிலெல்லாங் கடமை வழுவாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்ப ரென்பதூஉம் பெற்றாம். (ருரு (அ) பொழுதினை இத்துணை யென்று வரம் பறுத்து உணரும் பொழுதறி மாக்கள் அரசனைத் தொழுது கொண்டே காணுங் கையினராய் விளங்கவாழ்த்தி 'நிலவுல் கத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே நினது கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க. தம்மரசர் க்குப் பகைவரானோர் செய்யுங்! கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார் போலாது, என்றுந் தம்மாசர்பால் நெகிழாமெய்யன்பு பூண்டு பொழுதி னைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்ப டப் 'பொய்யாமாக்கள்' என்றார். இப்பொருள் காணமாட் டாத நச்சினார்க்கினியர் பொருத்தியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற்றொடரை 'மாக்கள் பொழு தளந்தறியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இலையின்றியும் உரைத்தார்; குறு