பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள். களிற்றியானைகளையும், யானைகளின் பாரிய தும்பிக்கை அற்று விழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல் வெற்றி விளைவித்துச் செஞ்சோற்றுக்கடன் கழித்து இறந்த ம றவரையும் நினைக் தும், காவலாயிட்ட தோற்சட்டையினையுங் கிழித்துக்கொண்டு அம்புகள் குளித்தமையால் செவியைச் சாய்த்துக்கொண்டு தீனி போடாமல் வருந்துங்குதிரைகளை நினைந்தும் ஒரு கை யைப்படுக்கையின்மேல் வைத்து மற்றொரு கையால் முடியை தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விர வைக்கழித்துப், பின்னாளில் பகைவரைச்சுட்டிப் படைக்கலங் கள் எடுத்த தன்வலியவிரலாலே அவர் தம்மையெல்லாம் வென் றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல் வெற்றியினை நிலைநிறுத்திப், பின்னாளில் தன் மனைவியைக்காணும் மகிழ்ச சியால் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க. 'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் இசை யென்பதனோடாசல் கூட்டி மக்கபோர், மிக்கநசை என்க. தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. கடகம் - கைக்காப்பு. 'அரசு' என்பது இப்பாட்டின்கண் வந்த வஞ் சிப்பொருட்டொடர்புக்கு எழுவாயாக முன்னே கூட்டப்பட் டது. பனிக்கும் - நடுங்கும், என்ரது பகையாசர்கேட்டு நடுங் குதற்குக் காரணமான போர்முரசு முழங்கும் பாசறையை. (அய-mங) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்க மாக எழுதப்பட்டிருக்கின்றது, ஆண்டுக்காண்க. ஏ உறு மஞ்ஞை - அம்புதைத்தமயில், இது மயிலின் சா யலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. பா வை - வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன்கையில் விளக் கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை - கூடல் வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்குப் பொருந்தி ஒலிப்ப. அயிர் - நுண்மணல். அஞ்சனம் - மை. முறி இணர் - தளிருக் கொத்தும். தோடு ஆர் - இதழ் நிறைந்த கானம் நத்திய