பக்கம்:முல்லை கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமுகில்கள் மொழி பெயர்ப்பு கா. ரீ. ரீ. இரண்டுமே அவசரமாகப் போய்க்கொண்டிருந்தன. மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது. அவை இருமுகில்கள்! வெண்மேகம் மேன்மேலும் போய்க்கொண்டிருந்தது: கருமுகில் தாழத் தாழ வந்து கொண்டிருந்தது. வெண்முகில் கருமுகிலை அசட்டையாகப் பார்த்து கணப்பொழுது கழித்து, எங்கேயடா புறப்பட்டாய்' என்று கேட்டது. - 'மண்ணுலகிற்குப் போகிறேன். நீ எ ங் ேக போகிறாய்?" "சொர்க்கத்திற்கு?” வெண்மேகம் ஆகாய விமானத்தைப் போல மேன் மேலும் பறக்கலாயிற்று. கருமுகில் உடைந்த ஆகாய விமானத்தைப்மோல 'விர்' என்று கீழே இறங்கலாயிற்று. வெண்முகில் பெருமிதத்தோடு பின்னாற் திரும்பிப் பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/35&oldid=881534" இலிருந்து மீள்விக்கப்பட்டது