72. முல்கல மண்ம்
பான். அதைக் கேட்டு அவர்கள் பாதுகாப்பான இடத் துக்குப் போய்விடுவார்கள். இந்தச் செய்தியைத் தெரிந்து கொள்ளாத இயல்புடைய பசுமாடுகளே அரசனுடைய வீரர்கள் சென்று பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அதிலிருந்து சண்டை தொடங்கும். 'சண்டைக்கு எடுபிடி மாடுபிடி' என்று தமிழில் ஒரு பழமொழி வழங்குகிறது. பாரத யுத்தம் கடப்பதற்கு முன் துரியோதனதியர் விராட நகரத்துப் பசுக்களே ஒட்டி வந்தனர் என்றும், அருச்சுனன் அவற்றை மீட்டான் என்றும் பாரதம் சொல்லும் வரலாறு இந்த இலக்கணத்துக்கு இலக்கியம் போல கிற்கிறது.
இந்த மாடுபிடி'யைச் சொல்லும் பகுதி புறப் பொரு ளில் வெட்சித்திணை என்று பெயர் பெறும்.
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் ருகும்' - என்று தொல்காப்பியம் அதன் இலக்கணத்தை வகுக் கின்றது. வேந்தல்ை விடப்பட்டிருந்த படைத் தலைவர்கள் வேற்று நாட்டுக்குச் சென்று பகைவர் அறியாதவாறு அவர்களுடைய பசுக்களைக் கொண்டுவந்து பாதுகாப்பது பொருந்தியதாகும் என்பது இதன் பொருள். ஏன் பசுக் களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்குரிய காரணத்தை இச் சூத்திரத்துக்கு உரை எழுதிய கச்சினர்க்கினியர் விரிக்கிரு.ர். - -
'இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒரு வர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யாத சாகிகளே ஆண்டு கின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனம் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறி வில்லாத ஆவின்ேக் களவில்ை தாமே கொண்டு வந்து பாது 'காத்திலும் தீதெனப்படாது அறமே யாம்' என்பது அவர் விளக்கம். -
தொல். புறத்திணை, 2.