பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவன்

இத்துணைச் சிறப்பும் அமைய முல்லைப்பாட்டைப் பாடி அளித்த புலவர், கந்தரத்தனார், செங்கண்ணனார், காரிக்கண்ணனார் போலும் புலவர்கள் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். அ று ைவ வாணிகன் இளவேட்டனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பண்ட வாணிகன் வெண்ணாகனார் போலவே வணிகக் குலத்தில் வந்தவர். அவர் தந்தை மேற் கொண்டிருந்தது பொன் வாணிகம். காவிரிப் பூம் பட்டினத்தில், நாற்சந்தியில் இடங் கொண்டு, 'மனத்தது பூவாக மாண்டாரின் நீராடி மறைந்து ஒழுகுவார்' போலும் மாபாவிகளைக் கொன்று தின்று அறம் காக்கும் காவல் பூதத் தின் பெயரையே தம்முடைய பெயராகக் கொண்டவர்களுள் தலை சிறந்து விளங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர். இச் சிறு வரலாற்றுக் குறிப்பைக் 'காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்' என்ற தம் பெயர் மூலம் வெளிப் படுத்துவதல்லது தம்மைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளா விழுமிய பண்பாளர் நம் புலவர். இனி அவர் பாடிய முல்லைப் பாட்டினுள் நுழைவோ மாக: