பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sir

விட்டார்கள். விழிப்புணர்வு அற்ற சிலர் என்றாலும், நம் மூதாதையருள், விழிப்புணர்வோடு இருந்தவர்கள். அழிந்தன போக அழியாதிருந்த அப்பழம் பாக்களை

யெல்லாம் அரிதின் முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப். பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்று கூடி இருந்தும், அப் பாக்களில் பொதிந்து கிடக்கும் ப்ொருள் வளம், அப் பாக்களின் அடி அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப்பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான் எட்டுத் தொகை நூல்களில், இடம் பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம் கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட காரணத்தால், அவ்வரிசையுள் முதற்கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான் நற்றிணை யினை, 'கற்றிணை விருந்து' என்ற தலைப்பிலும், 'நல்ல குறுந்தொகை' எனச் சிறப்பிக்கப்பெற்றதான் குறுந்தொகையினை, "குறுந்தொகைக் கோவை' என்ற தலைப்பிலும், ஆறாவது இடம் அளிக்கப்பெற்றது. ஆயினும், கற்றறிந்தார் போற்றும் கவி' என்ற சிறப் பினைப் பெற்றதான் கலித் தொகையினைப், 'பாலைச் செல்வி', 'குறிஞ்சிக்குமரி', 'மருதமலை மங்கை’, 'நெய்தற் கன்னி' என்ற ஐந்து தலைப்புகளிலும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன்.

பழந்தமிழர் தொகுத்தளித்த வரிசையிலேயே, அவ் வெட்டுத் தொகை நூல் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என, என் உள்ளம் விரும்பினாலும், சிலபல காரணங்களால், அவ் வரிசை வழிச் செல்ல இயலாமல் போய்விட்டது. அண்மையில், அவ்வரிசையுள், நான்காவ தாக நிற்பத ம் "ஒத்த பதிற்றுப்பத்து' என்ற