பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GT

பாராட்டினைப் பெற்றதுமாகிய பதிற்றுப்பத்தின் விளக்கத்தினை அளிக்க முன் வந்து, முதலும் ஈறும் இல்லாமல் போக, இடையில் எஞ்சி நின்ற எட்டுப் பத்துக்களில், முதல் ஐந்து பத்துக் களை, முறையே, 'புண் உமிழ் குருதி', 'அடுநெய் ஆவுதி', 'கமழ்குரல் துழாய்', 'சுடர்வீ வேங்கை’, வடுஅடு நுண்ணுயிர்' என்ற தலைப்புகளில் வெளியிட்டேன். எஞ்சிய பத்துக் களின் விளக்கங்கள் எட்டாய் உள்ளன. விரைவில் வெளி வரும்,

கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய தமிழ்ப் பொழில், தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாகிய செந்தமிழ்ச் செல்வி' ஆகிய திங்கள் வெளியீடுகளில் நான் எழுதி வந்த பதின்ே.ழு கட்டுரைகளை ஒரு நூலாகத் தொகுத்து, 1935 இல் எழுதப்பட்ட முதல் கட்டுரைத் தலைப்பாகிய, காவிரி' என்ற பெயரில் ஒரு நூல் வெளியிட்டேன்.

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்ற பெருமைக்குரிய நூலை, வரலாற்றுக் கண்ணோடும், இலக்கியக் கண்ணோடும், பாட்டுடைத் தலைவர்களின் பெருமை சிறுமைகளின் கண்ணோடும் திறனாய்வு செய்தாரும், .ெ ச ய், வ | ரு ம் பலர். அத்தகைய திறனாய்வுகள் சிலவற்றைப் படிக்கும்வாய்ப்புக் கிடைக்க அவர்கள் எடுத்த முடிவுகளில் சில. இளங்கோ அடிகளின்

படைப் போடு முரண் படுவதாகத் தெரிய வத்தமையால்,

அம் முரண்பாடுகளைத் தக்க காரணம் காட்டி விளக்கம் அளித்தேன். அவ்வாறு பதினோரு தலைப்புகளில் அளிக்கப்பட்ட விளக்கங்களின் தொகுப்பை ஒரு நூலாக்கிச் சிலம்பொலி' என்ற தலைப்பில் வெளி யிட்டேன். -

திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் "தமிழர் வரலாறு' என்ற ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்தும், இடைஇடையே, அவர் கூறும் சில கருத்துக்கள்.