பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24| டது. அதுமட்டும் அன்று; கான் சாகிபை உயி ரோடு பிடித்து இன்ன செய்யவேண்டும் என்றும் கட்டளையிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி அதுபற்றி லாரென்சுக்கு எழுதிய கடிதம் வருமாறு: 'ஆர்க் காட்டு நவாபு கான்சாகிபை அரசியல் கைதியாக உயிருடன் வைத்திருக்க விரும்புவானானால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்ணி அஞ்சு கிறோம். ஆனால், கான்சாகிபைப் பார்த்தவுடன் அவனது பட்டாளமெல்லாம் பார்க்கும் வகையில் கண்ணுக்குத் தெரியும். முதல் மரத்தில் அவனைத் தூக்கிலிட்டுக் கொன்றால் அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கும், இந்த உத்தரவோடு ஆரம்பமாகியது. கான் சாகிபைத் தாக்கும்படலம். ஏறத்தாழ ஓர் ஆண் டும் மூன்று மாதங்களும் அவனைப் பிடிக்க ஓயாது முயன்றது கும்பினி அரசாங்கம் ; பெருத்த பட்டா ளத்துடன் கான் சாகிபு கைப்பற்றியிருந்த மதுரை மாநகரைத் தாக்கியும் முற்றுகையிட்டும் அழிக்க முயன்றது. தாக்குதலின் கடுமை பயங்கரமாய் இருந்தது. எண்ணற்ற உயிர்ச்சேதங்கள் ஏற் பட்ட போதிலும் பிரிட்டிஷ் படைகளால் கோட் டையை நெருங்கக் கூட முடியவில்லை. கான்சாகி பின் படைகளுக்குத் தலைமை தாங்கிய பிரெஞ்சுத் தளபதியாகிய மார்ச்சந் மிகுந்த திறமையோடு போராடினான். கான்சாகிபும் அவனுடைய வீரர். களும் உயிரைத் துச்சமாக மதித்து உறுதி குலையா மல்சமர் புரிந்தனர். அதன் விளைவாகப் பெருத்த