பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 அம்மா உன் ஐயரைப்போல் அவனிமுழுதும் ஆள்வீர் (உன்) தாயைப்போல் மாமியைப்போல் (சௌ) பாக்ய வதியாயிருப்பீர் நிற்பீர் நிலைத்திடுவீர் நீடூழிவாழ்ந்திடுவீர் தாலி முடுக்கினால் சந்தோஷமாயிருப்பீர் மங்கிலியம் வாழத்தி மறையோர்கள் தான் கொடுத்தாள் பட்டெடுத்து ஓதிக்கொடுத்தாளே பாவையர்க்கு குலநாயகிக்குக் கொசவாமுந் தாழவைத்து வலமாய் இடைநெருங்க வைத்து மடிசாரிசைத்தாள் மங்கைநல்லாள் சாவித்திரி மடிதனிலே வீற்றிருக்க விரைக்கோட்டைமேலே வீற்றிருந்தார் அச்வபதி மறையோர்கள் வாழ்த்த மங்கள வாத்தியம் முழங்க மங்கலிய தாரணமுங் செய்தார் மனோகரமாய் சாவித்திரி தேவியுடன் சத்தியவான் வீற்றிருந்து காராவின் நெய் சொரிந்து காக்ஷி ஓமங்கள் செய்து அம்மி மிதித்து வந்தாள் அருந்ததியைப் பார்த்து வந்தாள் ஆசீர்வாதங்கள் செய்து அனுக்கிரகித்தார் மாமுனிகள் கடல் போல் முழங்கு மந்தக் கலியாணப் பந்தலினில் எடுத்துமொரு ஜாடி பணம் ஏற்றமுடனே வழங்கி அன்னமுடன் பாயஸமும் அபூர்வபணியாரங்களும் திருப்தியுடன் புஜித்தாள் தேவர் முதல் யாவர்களும் புசித்து எழுந்து மவாள் பொடி தேய்த்துக் கையலம்பி போஜன தாம்பூலம் புண்ணியருந்தான் கொடுத்தார் நாலுநாள் ஹோமமுடன் கலியாணம் ஆன பின்பு அச்வபதி ராஜாவும் அவருடைய தேவியரும் புத்திரியைத் தானணைத்து புத்தி சொல்லி முத்தமிட்டு மத்திரதேசம்போனார் மஹராஜர் தேவியுடன்