பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாவித்திரியம்மன் கௌரி நோன்பு செய்தல். சாவித்திரியம்மன் சலியா மன துடையாள் காயத்திரியம்மன் கடுந்தபஸு செய்யலுற்றாள் நாரதர் சொன்னதொரு நாளைக்குறித்து வைத்து அவர் சொன்னகால அளவை மனதில் வைத்து ல ஆபரணம் பூணும் அபேட்சைகளுமில்லாமல் மரவுரி கிருஷ்ணாஜினமும் மங்கையருந்தான் தரித்து மாமிமாமன் சிச்ருஷை மகிமையுடன் செய்து வந்தாள் பர்த்தாவின் பணிவிடைகள் பக்தியுடன் பண்ணிவந்தாள் கௌரியை பூஜித்துக் கிளிமொழியாள் நோன்பிருந்தாள் உபவாஸ மகா விரதம் உத்தமியுந் தானிருந்தாள் அமாவாசை பௌர்ணமியும் அஷ்டமி சதுர்த்தசியும் மாஸம் முதல் தேதியிலும் மஹாதேவியைப் பூஜித்தாள் பஞ்சமி பர்வ தினத்தில் பார்வதியைப் பூஜைசெய்தாள் பார்வதி தேவியை நோக்கித் தவமிருந்தாள் பாவையரும் மூன்று நாள் மௌனவிரதம் மிருது குழலாள் தானிருந்து உபவாஸமாகவிருந்தாளே உத்தமியாள் பால்குன மாதம் முதல் நாள் பாவை நல்லாள் சாவித்திரி நாரதர் வாக்கியத்தை நன்றாகவே உணர்ந்து மஹரிஷி சொன்னதொரு நாளு மிதுவாகு மென்று அதிகாலையில் எழுந்து அம்பிகையை பூஜை செய்து பக்தி பெரிதாக பரதேவியைச் சிந்தை செய்து பாரணைகள் பண்ணாதே பத்தினியுந் தானிருந்தாள் மாமனார் மாமியார் மங்கைதனை நோக்கி யவாள் பாரணைகள் செய்யுமம்மா பைங்கிளியே என்று சொன்னாள் (அம்மா) ஆறாஞ்சாமத்தில் அஸ்திமித்த பிற்பாடு போஜனங்கள் பண்ணுகிறேன் புண்ணியர்காள் என்று ரைத்தாள்