பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மூவர் தேவாரம் - புதிய பார்வை அச் செய்யுளின் மேல் வைக்கப் பெற்றது. ஆதலின் வைப்பு' என வழங்கப் பெறுவதாயிற்று." யாப்பு - 3 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன்கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன் தானே (3.5:1) இப்பதிகம் தான தான தனதனா தானனா தான தான தனனா தனதனா என இரண்டிச் செய்யுளாய், அதன் மேல், தான தானன தான தானன தான தானன தானா தானா என ஈரடி வைப்பாய் வருதலின் ஈரடி மேல் வைப்பு' என்னும் பெயர்த்தாயிற்று. ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணார்பிரி யாதசிற் றம்பலம் தான தானன தானன தானன தான தானன தானன தானன என முற்காட்டிய முதல் யாப்பின் கட்டளையடியினை இரண்டாகத் துணித்த நிலையில் அமைவது இம்மூன்றாம் யாப்பாதல் காண்க. 'கொட்டமே கமழும் (3.6) என்னும் முதற் குறிப்பினை யுடைய ஆறாம் பதிகத்தின் ஈரடிமேல் வைப்பாகிய உறுப்பு, 26. போக்கியல வகையாகிய சுரிதம், 'வைப்பு' எனவும் வழங்கப்பெறும். அது தரவோடு ஒத்த அளவினதாகியும் அதனில் குறைந்த அளவினதாகியும் குற்றத் தீர்ந்த பாட்டின் இறுதி நிலையை உரைத்து வரும் என்பர் தொல்காப்பியர் (தொல்.பொருள் - செய்யுள் நூற் 135, 137).