பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 193 செல்ல வந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே என ஈற்றடி முச்சீராய் வந்தமை காண்க. யாப்பு - 4 கண்ணுத லானும்வெண் aற்றின னுங்கழல் லார்க்கவே. (3.7:1) தானன தானானா தானனா தானன தானனா என வரும். இதனை, கண்ணுத லானும்வெண் aற்றி னானுங் - கழ - லார்க்கவே எனப் பிரித்திசைத்தலும் பொருந்தும். இப்பாடலில் நான்கு அடிகளிலும் முறையே கழ பரஞ் புக பெரு' என்பன மோனை ஒன்றிய அசைச் சொற்களாய்ப் பிரிந்திசைத்தல் உணரத் தக்க தாகும். 7 முதல் 12 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 5 மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந் (3.13:1) தானன தனதன தனன தானனா என வரும், 13 முதல் 23 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. விளம் விளம் மா விளம் என்றும் சீர்களைப் பெற்று வருவது இவ் யாப்பு விகற்பமாகும். இது திருநாவுக்கரசர் முளைக் கதிரிளம் பிறை (4.10) சொற்றுணை வேதியன் (4.11) என்னும் முதற் குறிப்பையுடைய காந்தாரப் பஞ்சமப் பதிகங்களில் அமைந்திருத் தல் அறியத் தக்கதாகும். ஆளுடைய பிள்ளையார் அருளிய காந்தாரப் பஞ்சமப் பதிகங்களுக்கு உரியனவாக இவண் எடுத்துக் காட்டிய யாப்பு விகற்பங்கள் ஐந்தனுள் முதல் மூன்று யாப்பு