பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 197 என வரும், 43 முதல் 51 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. இவண் குறித்த கட்டளையின் இரண்டாஞ் சீராகிய தானன என்பது தானதன' என வருதலும் உண்டு. 46-ஆம் பதிகம், முத்தி லங்கு வல்லுமை யஞ்சலே (3.46:1) தான தானதன தானன தானனா என வந்தமை காண்க. திருநாவுக்கரசர் அருளிய திருக் குறுந் தொகைப் பதிகங்கள் யாவும் இவண் குறித்த கெளசிகப் பண்ணின் முதற் கட்டளையின்பாற் படுவனவாகும். கட்டளை - 2 வீடலால வாயிலாய் விழுமியார்கள் நினகழல் (3.52:1) தானதான தானனா தன்னதான தானனா என வரும் தானதான என்பது 'தனன தான ஆதலும், தானனா 'தனதனா ஆதலும் தனனதான 'தான தான ஆதலும் அமையும். 52, 53-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. 54-ஆம் பதிகமாகிய திருப்பாசுரத்தில் நாற்சீரடிகளால் இயன்ற பாடல்களும் ஐஞ்சீரடி களால் இயன்ற பாடல்களும் விரவியுள்ளன. எனினும் ஒசை யொப்புமை நோக்கி இப்பதிகப் பாடல்களைக் கெளசிகப் பண்ணின் முதல் கட்டளையில் அடக்குதல் பொருந்தும். 'விரையார் கொன்றையினாய் (3.55) என்ற முதற் குறிப் புடைய பதிகம் திருமுறை ஏடுகளிலும் வெளிவந்த அடங்கன் முறைப் பதிப்புகளிலும் கெளசிகப் பண்ணுக்குரிய கடைசிப் பதிகமாகப் பஞ்சமம் என்ற பண்ணமைந்த பதிகங்களின் முன்னர் வைக்கப் பெற்றுள்ளது. எனினும் இப் பதிகத்தின் இயலிசை அமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் இப்பதிகம் பின்வரும் பஞ்சமம் என்ற பண்ணுக்குரிய இயலமைப்புடையதாகவே தோற்றுதல் புலனாகும் எனவே இது (3.58) முதல் 3.66 வரை யுள்ள பதிகங்கள் பஞ்சமம் என்னும் பண்ணுக்கு உரியன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இப்பதிகங்களில் மூன்று யாப்பு விகற்பங்கள் காணப்படுகின்றன.