பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மூவர் தேவாரம் - புதிய பார்வை எனக் கட்டளைக் கலித்துறை யாப்பாக அமைந்தன 17-20, 22, 24-28-ஆம் பதிகங்களாகும். இவற்றில் ஏவல்செய்ய என்றாங்கு அடியின் ஈற்றில் வரும் சீர்களில் இடையே லகரம் முதலிய ஒற்றுக் காரணமாக கடையொரு சீரும் விளங்காய் ஆகி' என்னும் விதி மாறுபடுமாயின், அச்சீர்களின் இடையே நின்ற லகரம்' முதலிய ஒற்றினைக் குறைந்த ஒலியினதாகக் கொண்டு அதனை விட்டு அதன் முன்னும் பின்னும் உள்ள குறில்களை இணைத்து நிரையசையாக்கி விளங்காய்ச் சீராக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இப்பதிகங்கள் மூன்றாந் திருமுறையில் பஞ்சமப் பண்ணுக்கு உரியனவாக 56 முதல் 62 வரையுள்ள திருப்பதிகங் களை யொத்து அமைந்தன கட்டளைக் கலித்துறை யாப்பில் வரும் இத்திருப்பதிகங்களை, பொன்னார் மேனியனே - புலித் - தோலை யரைக்கசைத்து (21, 22) தானா தானதனா - தன - தானா தனதனனா என இவ்வாறு பிரித்து இசைத்தல் மரபாகும். யாப்பு - 2 21, 23, 29-ஆம் பதிகங்கள் இவை போன்று கட்டளைக் கலித்துறையாக அமைந்தன அல்லவாயினும், நொந்தா ஒண்சுடரே - நுனை - யேநினைந்திருந்தேன் (7.21:1) தானா தானதனா - தன - தான தானதனா என கீழ்க்குறித்த வண்ணம் பிரித்துப் பாடுதற்கேற்ற ஒத்த ஒசைய வாய் உள்ளன. ஆகவே இப்பதிகங்கள் கீழ்க் குறித்த பதிகங் களுடன் சேர்த்து ஒரே கட்டளையாகக் கொள்ளப் பெற்றன. கட்டளை - 2 சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணம் (7.30:1)