பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மூவர் தேவாரம் - புதிய பார்வை யாப்பு - 3 எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தமோ டேலமில வங்கநதக் கோலமிஞ்சி (7.42:1) தனனாதன தானன தானன தானாதன தானான தானதானா எனவருவது 42-ஆம் பதிகம். இது கூற்றாயின (4.1) என்ற பதிகத்தின் யாப்பினை ஒத்திருத்தல் காணலாம். யாப்பு - 4 நஞ்சி யிடையின்று நாளையென் றும்மை நச்சுவார் (7.43:1) தான தனதான தானனா தானா தானனா என வருவது 43-ஆம் பதிகம். இக்கட்டளையடியினை தானதன தானன தான தானன தானனா எனவும், தானன தானன தான தான தனதனா எனவும் பிரிந்திசைக்கும்படி இப்பதிகப் பாடல்கள் அமைந் துள்ளன. 43-45 ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. கொல்லிப் பதிகங் களுக்கு மூன்று கட்டளைகள். எனவே அவற்றுடன் தொடர் புடைய கொல்லிக் கெளவாணப் பதிகங்களின் கட்டளைகளும் மூன்றெனக் கொள்ளுதல் பொருந்தும். இவண் காட்டிய யாப்பு விகற்பங்களுள் 1, 2-ஆம் விகற்பங்கள் இருவேறு கட்டளை களாகவும் 3,4-ஆம் விகற்பங்கள் இரண்டும் ஓசை ஒப்புமைபற்றி ஒரு கட்டளையாகவும் கொள்ளுதல் பொருந்தும்.