பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மூவர் தேவாரம் - புதிய பார்வை பொருள் கூறுவர் சிலர். தேவார ஆசிரியர் மூவரும் இறைவ னுக்கு அணியும் பாமாலைகளாக அழகிய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய திறத்தை இன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாகக் கொள்வர். தே வாரம் எனப் பிரித்து தெய்வத்தி னிடத்து அன்பை விளைவிப்பது எனப் பொருள் கூறுவர் சிலர், 'வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே' (7.5.9 திருவாரூர்ப்பதிகம்) என வரும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் வாரம் என்னும் சொல் இறைவன்பால் மெய்யடியார்கள் வைத்த பேரன்பு என்னும் பொருளில் வழங்கப் பெறுதல் ஈண்டு கருதுவதற்கு உரியதாகும். படைவீட்டு இராச்சி யத்தை ஆண்ட மல்லிநாத சம்புவராயன் (கி.பி 1321 - 1339) காலத்துப் புலவர் பெருமக்களான இரட்டையர்களே மூவர் திருப் பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் வழங்கியுள்ளார்கள்." 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் வரையப் பெற்ற சோழ வேந்தர் கல்வெட்டுகளில் தேவாரம் என்ற சொல் 'வழிபாடு என்ற பொருளில் வழங்கப் பெற்றுள்ளது. மூவர் திருப்பதிகங்களும் இறை வழிபாட்டில் பாடப்பெற்று வந்தமை பற்றி கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் அப் பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பெற்று வருகின்றன என்றும் அதற்கு முன்னர் அவை அவ்வாறு வழங்கப்பெற்று வந்தன என்பதற்குக் கல்வெட்டுகளிலோ பிறவற்றிலோ சான்றுகள் கிடைக்கவில்லை என்றும் ஆராய்ந்து கூறுவர் தி.வை சதாசிவ பண்டாரத்தார்." அவர் காட்டியபடி தேவாரம் என்ற பெயர் சோழர் கல்வெட்டு களில்தான் முதன்முதல் காணப்பெறுகின்றது. கி.பி 11-ஆம் நூற்றாண்டுக்குமுன் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வழங்கியது என்பதற்கு இலக்கியச் சான்றோ 6. சதாசிவ பண்டாரத்தார் தி.வை. தமிழிலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்) - பக். 66 7. செந்தமிழ் 45-ஆம் தொகுதி - பக்.121-28. தேவாரம்' என்னும் பெயர் வழக்கு என்ற கட்டுரையில் -