பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மூவர் தேவாரம் - புதிய பார்வை திருப்பதிகத்தின் இசை உலகர் கண்டத்திலும் கருவியிலும் அடங் காத வண்ணம் 'மாதர்மடப்பிடியும் (1:136) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகத்தைப் பாடித் திருத்தருமபுரத்து இறைவனைப் போற்றுகின்றார். மாதர்ம டப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூதஇனப்படை நின்றிசைபாடவும்.ஆடுவர் அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவராழ்கடல் வெண்டிரை யிரைந்துரை கரைபொருது விம்மிநின் றயலே நாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை யெழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல் இந்தப் பதிகப்பாடல்களில் மடக்கி மடக்கி வரும் சொற் கோவையைப் பலவிதத் தாளங்களில், பற்பல காலப் பிரமாணங் களில், பாடி முடிக்கின்றார். அதன் பின்னர் பெரும்பாணர் அந்தப் பதிகத்தைத் தமது யாழில் அமைத்துப் பாட முயல்கின்றார். யாழ் என்பது இருபத்திரண்டு நரம்பு கொண்ட ஓர் இசைக் கருவி; மெட்டு இல்லாத கருவி. இந்தக் கருவியில் ஒவ்வொரு நரம்பாக இசைக்கேற்ப நரம்புகளை மீட்டித்தான் வாசிக்க முடியும்! சம்பந்தர் பாடிய முறையில் யாழ்ப்பாணர் இந்தப் புதிய பதிகத்தை வாசிக்க முயன்றபோது அது யாழ்நரம்புகளில் அடங்கவில்லை. அவரது முயற்சிகள் யாவும் பலிக்க வில்லை. இதைக் காணும் பாணரின் சுற்றத்தார்களுக்கு அப்போதுதான் பிள்ளையாரின் இசை ஞானம் புரிகின்றது. பெரும்பாணர் பரிவும், நடுக்கமும், நாணமும் உற்று பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'இந்த யாழைத் தொட்டு வாசித்ததனால் தானே இந்த அவமானம் எனக்கு வந்தது' என்று சொல்லித் தம் கையிலுள்ள யாழை நிலத்தில் அறைந்து உடைக்க ஓங்குகின்றார். பிள்ளையார்