பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மூவர் தேவாரம் - புதிய பார்வை வருக' எனப் பூம்பாவையை அழைக்கும் முகமாக மட்டிட்ட புன்னையங்கானல் (2,47) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தைப் பாடுகின்றார். மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டாள் கபாலிச் சரம மர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிடல் காணாதே போதாயோ பூம்பாவாய் (1) என்பது இதன் முதற்பாடல். இப்பாடலைப் பாடியதும் கலையத்தி லுள்ள அங்கத்திலே பொருந்த அவ்வெலும்பனைத்தும் ஒருருவாய் வடிவு நிரம்புகின்றது. இதில் வடிவுபெறும் பூம்பாவை, இப்பதி கத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எட்டுப் பாடல்களைப் பாடியதும் 12 வயதுடைய அழகிய மங்கையளாகின்றாள். சமணரும் சாக்கியரும் இச் செய்கை இயல்வதன்று என்று கூறுவர் என்னும் கருத்தமைய, உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப், போர்க்கும் இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலிச் சரமமாந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் (10) என்ற பத்தாம் பாடலைப் பாடிய அளவில் செந்தாமரை விரிய அதனுள்ளிருந்து எழும் திருமகளைப் போன்று கூப்பிய செங்கையுடன் கலையம் உடைய எழுந்து வழிபட்டுத் தோன்ற அழகினுக்கு அணியாய் நிற்கின்றாள்.