இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
2
மேக ஜாலங்கள் வானில் தவழ்ந்தன;
மின்ன லின்ஒளி வீசித் திகழ்ந்தது; தேக பாரம் அறிந்திலேன்; யான் ஒரு
செவ்வி மேகத்தில் ஏறினேன்; எத்தனை வேக மாக அதுசென்ற காலத்தும்
மெய்யில் இன்பம் மலிந்த துணர்ந்தனன்; சோகம் ஏதிந்த மேக விலாசத்தில்?
தூய தண்மை மலர்ந்து விளங்கிற்றே.
3
மண்ணி லேநின்று பார்க்கின்ற பேர்கட்கு வான மேகம் கறுப்பும் வெளுப்புமாய் நண்ணல் அன்றி அழகொன்றும் தோற்றில;
நான்அம் மேகத்திற் கண்டதென் சொல்லுவேன்! எண்ணில் எத்தனை வண்ணங்க்ள் இங்குள,
இசையும் அத்தனை வண்ணமுங் கொண்டன, கண்ணி லேபடக் கண்டேன்; அவைகளின்
காட்சி யால்வரும் இன்பம் அளவுண்டோ?
2