பக்கம்:மேகமண்டலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

4.

காலி ருந்தும் நடந்தறி யாச்செல்வர்

கருதி ஏறவே வண்டி படைப்பவர், மேலி ருந்துகீழ் நோக்கிய நோக்கினர்

வேளை வேளையில் உண்ணப் படைப்பவர், நூலு ணர்ந்துவிஞ் ஞானத்தி ல்ைமக்கள்

நுகரும் இன்பநல் வாழ்வு பெறவழி கோலு வார்எண்ணம் அத்தனை யும்.உருக்

கொள்ளச் செய்கையிற் காட்டுவார் யாவரே?

5.

வீரர் போர்செய வேலையும் வாளையும்

மிகப்ப டைத்து வழங்கிக் கலைஞர்க்குக் கூர்மை யுள்ள உளிகள் எழுதுகோல்

கொட்டும் மத்தளம் வீணை முதலிய சீர்மை யோடு படைப்பவர், தம்தொழில்

செய்தல் இன்றி மறந்துவிட் டால்இந்தப் பாரி லேகலை ஏது? கலைஞர்கள்

படம்இ ழந்தபாம் பென்ன ஒழிவரே !

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/115&oldid=620692" இலிருந்து மீள்விக்கப்பட்டது