பக்கம்:மேகமண்டலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

2

ஒருநாள் என்றன் காதலிதான்

ஒட்ட மாக ஓடிவந்தாள்; திருநாள் வரப்போ கின்றதென்றே

சிரித்துக் கூவிக் குதுகலித்தாள். வருமோ என்று காத்திருந்த

மல்லி கைப்பூ மலரும்என்றே திருவாய் மலர்ந்தாள்; எனக்குமனம்

சிறிதே மலர்ந்துள் உவந்ததுவே.

3

"எங்கே எங்கே, பார்த்திடுவோம்!"

என்றே அவளைத் தொடர்ந்தோடி அங்கே சென்றேன்; ஆச்சரியம்!

அரும்பு கட்டி ஒருகொத்து

எம்கா தலுக்கோர் உருஎன்ன

இலங்கக் கண்டேன்; முதற்பூவை இங்கார் பறிப்பதென்னும்ஒரு

விவாதம் எமக்குள் எழுந்ததுவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/15&oldid=620481" இலிருந்து மீள்விக்கப்பட்டது