இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
2
ஒருநாள் என்றன் காதலிதான்
ஒட்ட மாக ஓடிவந்தாள்; திருநாள் வரப்போ கின்றதென்றே
சிரித்துக் கூவிக் குதுகலித்தாள். வருமோ என்று காத்திருந்த
மல்லி கைப்பூ மலரும்என்றே திருவாய் மலர்ந்தாள்; எனக்குமனம்
சிறிதே மலர்ந்துள் உவந்ததுவே.
3
"எங்கே எங்கே, பார்த்திடுவோம்!"
என்றே அவளைத் தொடர்ந்தோடி அங்கே சென்றேன்; ஆச்சரியம்!
அரும்பு கட்டி ஒருகொத்து
எம்கா தலுக்கோர் உருஎன்ன
இலங்கக் கண்டேன்; முதற்பூவை இங்கார் பறிப்பதென்னும்ஒரு
விவாதம் எமக்குள் எழுந்ததுவே.