இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முள்ளும் மலரும்
1.
முள்என்று வெட்டினை நீ;-உள்ளே
மொட்டும் மலரும்அவ் வெட்டில்அழிந்தன. கள் என்று தட்டிவிட்டாய்-அதில் -
கலந்த அமுதம் நிலந்தனில் வீழ்ந்தது.
2 ஓடென் றுடைத்தனையே;-உள்ளே
உள்ள பருப்பையும் தள்ளிவிட் டாயன்ருே ?
காடென்று தீயைவைத்தாய்;--அதிற்
கமழும் மலர்க்கொடி காய்ந்தது கண்டிலை.
13