பக்கம்:மேகமண்டலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

4 .

காலை வேளையி லேகிழக் கேவரும்

கதிர வன்கதிர் இன்பம் உ றுத்துமாம்; நீல வானத்தி லேமுகில் மாரியை

நீண்ட நேரம்பெய் தால்இன்பம் மேவுமாம், கோல மார்அவ் வருவியி லேநின்று

குளித்தல் தேகத்தை வச்சிரம் செய்வதாம்; சால இன்ப வகைகளைக் கேட்கிலோ

தட்டொன் றின் றிப் பொழிந்திடு வானரோ !

5

வான மேலுரு கூரையாம் ஞாயிறும்

மதிய மும்விளக் காம்பழம் நல்லுன; பானம் அவ்வரு விப்புன லாம்;மரப்

பட்டை யேதுகி லாம்;வனம் வாழ்வன ஈனம் அற்றமெய்ந் நண்பர்க ளாம்; இன்பம்

இத்தனைக்குளும் ஊறி இருப்பதாம்! ஞானம் அத்தனை பெற்றவன் சொல்வதை

நாம்அறிந்து தெளிதல் அரிதம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/51&oldid=620556" இலிருந்து மீள்விக்கப்பட்டது