இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
4 .
காலை வேளையி லேகிழக் கேவரும்
கதிர வன்கதிர் இன்பம் உ றுத்துமாம்; நீல வானத்தி லேமுகில் மாரியை
நீண்ட நேரம்பெய் தால்இன்பம் மேவுமாம், கோல மார்அவ் வருவியி லேநின்று
குளித்தல் தேகத்தை வச்சிரம் செய்வதாம்; சால இன்ப வகைகளைக் கேட்கிலோ
தட்டொன் றின் றிப் பொழிந்திடு வானரோ !
5
வான மேலுரு கூரையாம் ஞாயிறும்
மதிய மும்விளக் காம்பழம் நல்லுன; பானம் அவ்வரு விப்புன லாம்;மரப்
பட்டை யேதுகி லாம்;வனம் வாழ்வன ஈனம் அற்றமெய்ந் நண்பர்க ளாம்; இன்பம்
இத்தனைக்குளும் ஊறி இருப்பதாம்! ஞானம் அத்தனை பெற்றவன் சொல்வதை
நாம்அறிந்து தெளிதல் அரிதம்மா!