இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யார் அழுகை நிறுத்துவார் ?
2
விரும்பிப் பொம்மை எவ்வளவோ
விலைக்கு வாங்கித் தந்திட்டேன்; "கரும்பு வேண்டும்" என்ருன்; ஓர்
கருப்பங் கழிவாங் கித்தந்தேன்; திரும்ப, "அதனை நறுக்கித்தா,
தின்பேன்" என்ருன் செய்துதந்தேன்; "கரும்பு பழைய படியாக்கிக்
கையில் தாநீ" என்கின்ருன்.
3
"ஆனை வேண்டும்" என்றழுதான்; ஆனைப் பாகன் றனைக்கெஞ்சி நீநில் என்றே அதன் அருகில்
நிற்க வைத்தேன்; 'குடமொன்று தான்.இங் கெனக்கு வேண்டும்என்ருன்;
தந்தேன்; "இந்தக் குடத்துக்குள் ஆனை அதனைப் புகுத்"தென்ருன்! ஆரே அழுகை நிறுத்துவார்?