பக்கம்:மேகமண்டலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அழுகை நிறுத்துவார் ?

2

விரும்பிப் பொம்மை எவ்வளவோ

விலைக்கு வாங்கித் தந்திட்டேன்; "கரும்பு வேண்டும்" என்ருன்; ஓர்

கருப்பங் கழிவாங் கித்தந்தேன்; திரும்ப, "அதனை நறுக்கித்தா,

தின்பேன்" என்ருன் செய்துதந்தேன்; "கரும்பு பழைய படியாக்கிக்

கையில் தாநீ" என்கின்ருன்.

3

"ஆனை வேண்டும்" என்றழுதான்; ஆனைப் பாகன் றனைக்கெஞ்சி நீநில் என்றே அதன் அருகில்

நிற்க வைத்தேன்; 'குடமொன்று தான்.இங் கெனக்கு வேண்டும்என்ருன்;

தந்தேன்; "இந்தக் குடத்துக்குள் ஆனை அதனைப் புகுத்"தென்ருன்! ஆரே அழுகை நிறுத்துவார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/68&oldid=620592" இலிருந்து மீள்விக்கப்பட்டது