இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
10
நம்முடை வீட்டுக் குழந்தை-தெரு நண்ணி அயல்மனை மகவு
விம்மி அழுவது கண்டால்-மெல்ல
விரும்பி அதன்கண் துடைக்கும்.
11
பகையென் றுறவென்று நெஞ்சில்-அந்தப்
பச்சைக் குழந்தைகட் கில்லை; சிகைபிடித் தேசண்டை போடும்;-வெகு
சீக்கிரம் கட்டித் தழுவும்.
12
பிஞ்சுப் பிராயத்தில் ஈசன்-நெஞ்சில் பேணுதற் கன்பினை வைத்தான்;
வஞ்ச உலகில் வளர்ந்து-பகை
வளரஅவ் வன்பைத் தொ லைத்தோம்.
68