இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கெட்ட பிள்ளை
பொன்னுல் அணிபுனைந்து
போற்றி மகிழ்ந்ததுவும் என்னேடே எங்கும்
அழைத்துச்சென் றெய்தியதும் "என்பிள்ளை நன்ருகப்
பேசுவான்' என்றெவர்க்கும் அன்பில் இசைத்தே
அவன்புகழைப் பேசியதும் கல்வி பயிற்றியதும்
கட்டழகு கண்டவர்கள் பல்விதமாய்ப் பாராட்டக்
கேட்டுப் பரிந்ததுவும் எல்லாம்என் உள்ளத்தே
இன்று சுழன்றனகாண். நல்லான் அவனை
நலிந்தேனென் றெண்ணமிட்டேன். காலத்தின் கோலமென்றன் கண்ணை அவித்ததென ஓலமிட்டேன்; துக்கத்தை
உள்ளடக்கி வைத்திருந்தும்
79