320
மேனகா
அவனைப் பங்களாவுக்கு வெளியில் போயிருக்கும்படி அனுப்பிவிட்டேன். அவனை அழைத்து மோட்டார் வண்டி கொண்டுவரும்படி சொல்லுகிறேன்” என்று கூறியவண்ணம், வெளியிற் சென்று அங்கிருந்த கிட்டனைக் கண்டு, உள்ளே நிகழ்ந்த சம்பவங்களை அவனிடம் சுருக்கமாகக் கூறி மோட்டார் வண்டி யொன்று கொண்டு வரும்படி அவனை அனுப்பி உள்ளே வந்தாள்.
அவன் மோட்டார் வண்டி கொண்டு திருப்பிவர அரை நாழிகை நேரமாயிற்று. அதற்குள், மேனகா, நிகழ்ந்த விஷயங்களை யெல்லாம் சுருக்கமாக இரண்டு கடிதங்களில் எழுதி ஒன்றில் நூர்ஜஹானது விலாசமும், மற்றொன்றில் டாக்டர் துரைஸானியின் விலாசமும் எழுதி அவற்றை உடனே தபாலில் போடும்படி பங்களாவின் வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பினாள்.
அதன் பிறகு சிறிது நேரத்தில், வராகசாமி, கிட்டன், கனகம்மாள், தங்கம்மாள், மேனகா முதலிய யாவரும் மோட்டார் வண்டியில் அமர்ந்து குதுகலமாக எழும்பூர் ஸ்டேஷனை நோக்கிச் சென்றனர்.