பக்கம்:மேனகா 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மேனகா

தள்ளிவிடப்பட்டு சாமாவையரது மார்பின் மீது படேரென்று விழுந்தாள். அதனால், அவருடைய விரல்கள் பலகையில் நகங்கின. அதனால் வலி உண்டாயிற்று; அவளது இனிய மேனி தம்மீது பதிந்த இன்பத்தில் அவர் அதைக் கவனிக்க வில்லை. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொள்பவரைப் போல பட்சமாக அப்படியே அவளை இருகைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்ட வண்ணம், “அடாடா! மூடப் பயல்கள் இப்படித்தானா வண்டியை விசையாக சொடுக்கி இழுக்கிறது!” என்று சொல்லி அதிக உருக்கமான குரலில், “ஏன் கமலா எங்கேயாவது அடிபட்டதா?” என்று அன்போடு கேட்க, அவள் நாணம் அடைந்தவளைப்போலப் பாசாங்கு செய்து அவரது அணைப்பிலிருந்து விடுபட முயன்றாள். அவர் அவளை விடாமல், “கையில் காயம்பட்டதா? நெற்றியில் அடிபட்டதா?” என்று கூறி, அவளது கை நெற்றி முதலிய இடங்களைத் தமது வலது கையால் தடவிக் கொடுத்தவண்ணம் இடதுகையால் அவளை இறுகப் பிடித்தார். அவள் முன்னிலும் அதிகமாகத் தத்தளித்து, “விடுங்கள்; விடுங்கள் ஸ்டேஷன் வந்துவிட்டது, யாராகிலும் பார்க்கப்போகிறார்கள். அப்புறம் ஆகட்டும், இப்போது விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினாள். அதற்குள் வண்டி ஸ்டேஷனை அடைந்தது. சாமாவையர் மிகவும் துணிந்து அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அவளை அவளது இடத்தில் உட்கார வைத்தார். அப்போது “பூந்தோட்டம்! பூந்தோட்டம்” என்று போர்ட்டர் அந்த ஊரின் பெயரைச் சொல்லி, தூக்கத்தில் அழுதுகொண்டே வந்ததைக் கண்ட சாமாவையர் சிறிது சாந்தமடைந்து தமது இடத்தில் உட்கார்ந்தார். என்றாலும் அப்போது அவரது மனம் பட்டபாட்டை என்னவென்று விவரிப்பது; அவரது மனோநிலைமையை வருணிப்பதைவிட யூகித்துக் கொள்வதே நல்லது. எவருக்கும் கிடைக்காத ஒப்புயர்வற்ற அந்த இன்பத்தைத்தாம் அநுபவித்திருந்த சமயத்தில் அந்த ஸ்டேஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/65&oldid=1251900" இலிருந்து மீள்விக்கப்பட்டது