உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 15 இவ்வளவு இன்னலை, இங்கு மட்டுமல்ல, எங்கும்- இன்று மட்டுமல்ல, பன்னெடுங் காலமாக - அனுபவித்து வரவேண்டியிருக்கிறது! சகித்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது! சாமான்யர்களாகிய நம் காலத்திலே மட்டுமா? வீராதிவீரர்கள், சாம்ராஜ்யாதிபதிகள் காலத்திலேயுஞ்சரி யோக யாக விற்பன்னர்கள், வேத் வேதாந்த சிரோமணிகள், ஆழ்வாராதிகள், நாயன் மார்கள்; அழையை அறிந்தவர்கள், அரி அரனை ஆத்மஞானிகள் என்போர்களின்... நாட்களிலேயும், இந்தப் பிரச்சினை இங்கிருந்ததுடன், இல்லாமை, போதாமை எனும் நோயின் பிடிப்பிலே சிக்கி ஒரு பெருங்கூட்டம் அவதிப்படவும், செல்வத் திலும் சுகத்திலும் ஒரு சிறு கூட்டம் அமிழ்ந்து கிடக் கவுமான நிலைமை இருந்தே வந்தது. இதனை மக்கள் பலகாலமாகச் சகித்துக் கொண்டனர்! நம்மால் முடியாது என்றெண்ணி மருண்டனர்! யாராவது இதை" மாற்றும் முறையைக் கூற முன் வரமாட்டார் களா என்று ஏங்கி நின்றனர்! எந்தக் குறுக்கு வழி புகுந்தேனும், இந்தக் கஷ்டத்திலிருந்து நீங்க முடியு மா என்று வீழ்த்திக் கொண்டனர்! என்னென்னவோ செய்தனர், பெதைத்தனர்! ஒருவரை ஒருவர் வெட்டி தீர்க்க. இன்னும் ஓர் முடிவு இந்தப் பிரச்னைக்கு இந்தப் முடிவு காண முடியாத காரணம் என்ன? அறிவு இல்லை என்று கூறிவிட முடியுமா? பறக்கக் கூடக் கற்றுக் கொண். டான்! பார் முழுவதையும் பாக்கட் சைஸ் ரேடியோ வுக்குள் அடக்கிவிட்டான்! ஆனால் இன்னமும், பசி, பட்டினி, பஞ்சம் இன்றி எல்லோரும் வாழ வழி கண்டு பிடிக்க மட்டும் மனிதனுடைய அறிவு அவனுக்குப்