50
ளுமில் என்பது இடம் பெயர்ந்து மDல் என ஆகிப் பின் மயில் ஆகியது என்பர். ஞமில் என்பது மயிலைக் குறிக்கும் பழஞ்சொல்லாகும்.
பேச்சு மொழியில் ஞகரம் க்ய’ என மாறுகிறது.
ஞானம்-க்யானம் ஞாபகம்-க்யாபகம்.
ணகரம்
தமிழில் மொழி முதற்கண் ணகரம் வருதல் இல்லை தெலுங்கில் ணகரம் னகரமாக மாறுகிறது.
கண்-கன்னு (தெலு) மண்-மன்னு (தெலு) ளகரம் ணகரமாகவும் டகரமாகவும் மாறும் இயல்பிற்று’
நள்-நண்பு-நட்பு
நகரம்
நகரம் மொழி முதற்கண் வரும்; செய்யுநர், அறியுநர், முதலிய சொற்களில் இடையிலும் வருகிறது. பொருந், வெரிந் என்ற இரு சொற்களில் மட்டும் நகரம் ஈற்றில் வருகிறது. வேறு எங்கும் மொழியிடையும் கடையும் வரவில்லை. . மொழியிடையே தகரத்தின் - முன் மெல்லொலியாக வருகிறது.
செம்பவளம்-செஞ்சாந்து-செந்தார். இது மகரத்தின் திரிபாகும்.
இருந்தனர். வந்தனர் முதலிய சொற்களில் தகரத்தின் இன மெல்லொலியாக வருகிறது.
வட்சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது இருவகை வடிவங்களால் எழுதுகின்றனர்.
- 1. C. D. P. ப்க். 138