62
இதனில் பகரமும் ஆய்தமும் எதுகைகளாக அமைந்துள்ள மையைக் காண்க.”
‘கய்ங்கவி லாளனை எஃகுள் ளடக்கி-பெருங்கதை 1 156 : 161 எ.கொளி களிற்றின் வெய்துயிர்த் துயங்கு 1 : 33 : 109
கய், எஃ; எஃ, வெய் என்பன அடி எதுகைகளாக அமைந் துள்ளமையைக் காண்க.”
நம்மாழ்வார் பாடலிலும் இவ்வகை எடுத்துக்காட்டுகள் இடம் பெற்றுள்ளன.
அஃதே.................
கொய்பூம் பொழி...............
செய் கோலத்து............
அக்காமல்............ -திருவாய் மொழி 4-11
யகர ஒலி போலவே ஆய்தத்திற்கு ஹகர ஒலியும் இருந்தது. றகரத்தின் முன்னும் டகரத்தின் முன்னும் வரும் ஆய்தம் ஹவாக ஒலித்தது. ஏனெனில் றட முன் யகரம் வருவதில்லை.
ஹவாக ஒலித்த ஆய்தம் ஆய்தக் குறுக்கம் என்றும், யகரமாக ஒலித்த ஆய்தம் முற்றாய்தம் எனவும் பேராசிரியர் தெ. பொ. மீ. குறிப்பிடுவார்.”
நன்னூலார் ல, ள ஈற்றுச் சொற்கள் புணருமிடத்து
வரும் ஆய்தம் அஃகும் என்றும், அஃது ஆய்தக் குறுக்கம் எனப்படும் என்றும் கூறுவார்.
லளஈற்று இயைபினும் ஆய்தம் அஃகும். நன்-97
1. த. எ. இ. அ-பக். 292. 2. A History of tha Tamill Langnage T.P.M.–u. 187 3. A History of the Tamil larguage T. P. M. L, 139