பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. பொது அறிவியல் னுடைய கவர்ச்சிகள் வளர்க்கப்பெறல் வேண் டும் என்றும், தன்னுடைய உற்சாகங்கள் ஊக்கு விக்கப்பெறல்.வேண்டும் என்றும் அவன் விரும்பு கின்ருன். அவ்வகைப்பட்ட அறிவியலே அவ னுடன் பொருந்துகின்றது ; அந்த அறிவி யலையே அவன் கையாளவும் முடிகின்றது. அஃது எங்குள்ளது ? முதல்நிலைப் பள்ளியில் அறிவியல் - அஃது எங்குள்ளது ? பள்ளிச் சிருர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் அஃது உள்ளது: அவர்கள் உயிர்க்கும் காற்றில், அவர்கள் பருகும் நீரில், அவர்கள் உண்ணும் உணவில் அதனைக் காண லாம் ஆக்ஸிஜன் என்ருல் என்ன ? , நீரி னுள் கணிப் பொருள்கள் எங்கனம் செல்லு கின்றன ? , விட்டமின் என்பது என்ன ? : -இவையெல்லாம் அறிவியல், அவர்கள் பள்ளிக்கு வரும் வழியில் காணும் பொருள்களில் அறிவியல் உள்ளது : மின்சாரம் தெருவிலுள்ள ஊர்தியை எங்ங்ணம் இயக்கு கின்றது ? , வேனிற் காலத்தில் என்னுடைய நாய் மூச்சு வாங்கும்பொழுது ஏன் நாக்கினைத் தொங்க விடுகின்றது? ', ' வானம் நீல நிறமாக இருப்பதற்குக் காரணம் என்ன?-இவையாவும் அறிவியலே. அவர்களது வீடுகளிலும் அறிவியல் உள்ளது: நம்முடைய கதவிலுள்ள மணி எதல்ை செயற் படுகின்றது? , எலுமிச்சைப் பழம் புளிப்பாக இருப்பது எதல்ை? , நம்முடைய உலே நம் வீட்டை எங்ங்னம் சூடாக்குகின்றது? -இவை யாவும் அறிவியலன்ருே ? பள்ளியிலும் அறிவியல் உள்ளது : தி யனைப் பான் எங்ங்ணம் தீயை அணைக்கின்றது? குடிநீர்க் குழலில் துரு ஏறுவதற்குக் காரணம் என்ன? ', ' நாம் எல்லோரும் ஏன் அம்மை குத்திக் கொள்ளவேண்டும்? -இவை போன் றவை யாவும் அறிவியலே. ஆகவே, நாம் கற்பிக்கும் சிறுவர்களையும் சிறுமி களையும் சுற்றி அறிவியல் உள்ளது. அவர்கள் அதனைக் காணுமல் இருத்தல் இயலாது. சற்றுத் துணைபுரியின் அவர்கள் இன்னும் அதனை அதிக மாகக் காண்பர். சிறிதளவு உற்சாகம் அளித்தால் அவர்கள் அதன்பால் அதிக அக்கறையும் கொள்வர். அது பயன்படும் சாத்தியக் கூறு களைக் கண்டு சிறுவர்கள் தம் சுற்றுப்புறச் சூழ் நிலையைப்பற்றிக் கற்றுக் கொள்ளுவதில் தமது 2 திறமையைப் பயன்படுத்தித் துணை புரியவல்ல ஆசிரியருடன் சேர்ந்து அவர்கள் அறிவியலைப் பற்றி அதிகமாகக் கற்றுக் கொள்வர். அஃது என்ன செய்யக்கூடும்? சரியான தகவலுள்ள மனிதர் மிகவும் கவர்ச்சி கரமானவர் என்பது பொதுவான உண்மை யாகும்; சூழ்நிலையைப்பற்றிய சில தகவல் அத் தகைய சரியான தகவலுள்ள தனியாளாக ஆவ தற்கு வேண்டிய சாதன வகைகளுள் ஒன்ருகும். இதிலிருந்து நாம் நம்முடைய மாணுக்கர் களிடையே கால்-பந்திற்குக் காற்றடிப்பதுபோல் தகவல்களை நிரப்புவதும், அவற்றை அவர்கள் உரையாடலில் சில இடங்களை மட்டிலும் நிரப்பிக் கொண்டு பயன் படுத்துவதும் ஆகும் என்பது பொருளன்று. நாம் அவர்களையே சில பொது மைக் கருத்துக்களை அல்லது பொருள்களைக் கற்றுக் கொள்ளத் துணைசெய்ய விரும்புவதும் அவற்றை அவர்கள் தம் சூழ்நிலையிலுள்ள புதிர் களே விளக்கப் பொருள் கூறுவதில் பயன் படுத் துவதுமாகும் என்பதுவே அதன் பொரு ளாகும்.

இதனை எடுத்துக்காட்டால் விளக்கலாம் : அல்லி மலர்க் (lily) குடும்பத்தைச் சேர்ந்த மலர் கள் யாவும் சாதாரணமாக ஒரே நிறமுள்ள மூன்று புற இதழ்கள் (sepais), ஆறு மகரந்தக் கேசரங்கள் (stamens), ஒரு சூலகம் (pistii) முதலியவற்றைக் கொண்டுள்ளன. பத்து வய துள்ள பாலன் இவற்றை நெட்டுருச் செய்யாமல் முழுமையான நல்ல அனுபவ அறிவு பெறுதல் கூடும். ஆணுல், அவன் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து, தாவரங்களும் பிராணிகளும் ஒருசில சிறப்பியல்புகளை யொட்டிச் சில இனங்களாகப் பிரிக்கப் பெறுகின்றன ; இந்தச் சிறப்பியல்புகளை அறிந்துகொள்வது அந்த உயிர்வாழ் பொருள் எந்தப் பெரிய இனத்தைச் சேர்ந்தது என்பதை அறியத் துணைசெய்கின்றது ' என்று பல தாவ ர ங் களை ப் ப ற் றி யு ம் பிராணிகளைப்பற்றியும் கற்றுக் கொள்வதாகக் கருதுவோம். இந்தப் பொதுமைப்பாடு அவனுக்குத் தான் காணுறும் தாவரங்களையும் பிராணிகளையும் அடையாளம் கண்டு கொள்ளவும், அவற்றின் பழக்கங்களைப் பற்றி ஆராயவும், அவற்றின் துணை அல்லது தீங்குபற்றி அறுதியிடவும் இவை போன்ற வேறு முறைகளிலும் துணைசெய்தல் கூடும். கருத் துடன் ஆராய்வதன் மூலமும், உற்று நோக்கல் மூலமும் பல சிறிய கருத்துக்களை ஒரு பெரிய

2