44
ரமண மகரிஷி
சட்டையையும் கழற்றிக் குளத்திலே போட்டு விட்டார். மிகுதியாக அவர் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். அதைக் கோவணம் போலக் கிழித்துக் கட்டிக் கொண்டார். மற்றவற்றைக் குளத்து நீரிலே விட்டுவிட்டார். அஞ்ஞான மாயையாக அது மிதந்து, ஞானக் குளத்தின் அமித்திலே ஆழ்ந்து சரணடைந்தது.
திருக்கோயில் அருகே முடிவெட்டுவோன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்டார். அவனிடம் சென்று தனது தலையை மொட்டை அடிக்கச் சொல்லி அவர் மொட்டைத் தலையரானார்.
மொட்டை அடித்துக் கொண்டவவர் அக் குளத்திலே குளித்தாரா என்றால் அதுவுமில்லை. அதே பழநியாண்டிக் கோலத்தோடு கோயிலுக்குள் நுழைந்தார். அதுபெரிய கோயிலானதால் அங்கே ஓரிடத்தில் சென்று உட்கார்ந்து விட்டார். அந்த இடம் வெங்கட்ராமன் தியானம் செய்ய வசதியான இடமாகவும் இருந்தது. கோயிலுக்கு எதிரில் ஆயிரங்கால் மண்டபம், அதனருகே ஒரு பூங்கா, அருகிலே ஒரு குளம். அதனைச் சிவகங்கைத் தடாகம் என்று இன்று மக்கள் அழைக்கிறார்கள்.
திருக்கோவிலின் முதல் பிரகாரத்தின் வடதிசையில் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது அல்லவா. அதன் நடுவில் ஒரு மேடை உள்ளது. அதற்கும் தென்கிழக்கே ஒரு பாதாளக் கோயில் இருக்கிறது. அங்கு ஒரு சிவலிங்கம் உள்ளது. வெங்கட்ராமன் அக்கோயிலுக்குள் சென்ற காலத்தில் அதற்குப் பூசை வழிபாடு ஒன்றும் செய்யும் பழக்கம் இல்லை. இப்போது அந்த இடம் பாதாள லிங்கேஸ்வரர் திருக்கோயிலாகி, பூசைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த இடத்தைத்தான் இராஜகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது விழா நடத்திக் கோலாகலமாகத் துவக்கி வைத்தார்.