பக்கம்:ராஜாம்பாள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 111.

நடேச சாஸ்திரி: நேராய் எழும்பூரிலிருந்துதான் வந்தேன்.

துரைசாமி ஐயங்கார்: எழும்பூர் ஸ்டேஷனில் டிக் அட்டு வாங்கினர்களா? அல்லது திருவல்லிக்கேணிக் கிளே ஆபீசில் டிக்கட்டு வாங்கினர்களா?

நடேச சாஸ்திரி எழும்பூரில்தான் வாங்கினேன். துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள் கல்யாணம் தீர்மானஞ் செய்தது.முதல் நேற்றுத்தான் காஞ்சிபுரம் வந்தீர்களா? அல்லது இதற்கு முன்னுல் எப்போதாவது வந்தீர்களா?

நடேச சாஸ்திரி: நேற்றுத்தான் வந்தேன். துரைசாமி ஐயங்கார்: நேற்றைக்கு முன்னுல் ஒரு மாதத்திற்குள் எப்போதாவது காஞ்சீபுரம் வந்தீர்களா? அல்லது அதற்கு முன்னுலாவது சமீபத்தில் வந்தீர்களா?

நடேச சாஸ்திரி: நேற்றுத்தான் வந்தேன். துரைசாமி ஐயங்கார்: நேற்றைக்கு முன்னல் ஒரு மாதத்திற்குள் எப்போதாவது காஞ்சீபுரம் வந்தீர்களா என்று சற்று யோசனை செய்து சொல்லுங்கள்.

நடேச சாஸ்திரி: யோசனை செய்ய என்ன இருக் கிறது? நான் காஞ்சீபுரம் வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகிறது. அதுமுதல் நேற்று வரையில் நான் வரவேயில்லே என்று நிச்சயமாய்ச் சொல்வேன். -

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் சென்னையில் இருக் கும்போது ராஜாம்பாள் ஒரு வாரத்திற்கு முன்னுல் வந்து தங்களிடம் பேசினதாகச் சொன்னிர்களே! என்ன கிழமை வந்தாளென்றும், எத்தனை மணிக்கு வந்தாளென் றும் தயவு செய்து சொல்லுங்கள்.

நடேச சாஸ்திரி: நேற்றுப் புதனுக்கு முந்தின புதன் கிழமை சாயங்காலம் நாலடித்துப் பத்து நிமிஷத்திற்கு வந்தாள். - -

துரைசாமி ஐயங்கார்: நாலடித்துப் பத்து நிமிஷத் திற்கு வந்தாளென்று அவ்வளவு நிர்ணயமாய்ச் சொன் ன்ர்களே; அவள் வந்தவுடனே மணி என்னவென்று பார்த்தீர்களோ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/115&oldid=684657" இலிருந்து மீள்விக்கப்பட்டது