பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடையின் மேற்புறத்திலே, ஒரு திருப்பம் இருந்தது. அங்கே ஒரு ராட்சத முதலே வசித்துவந்தது. அது, இருந்த இடத்திலிருந்தே தினமும் நந்திரியா காலேயில் ஓடையைத் தாண்டித் தீவுக்குச் செல்வதையும், மாலையில் மீண்டும் தாண்டி வீடு திரும்புவதையும் கவனித்துவந்தது. பேராசை பிடித்த முதலேக்குக் குரங்கு இறைச்சி என்ருல் கொள்ளே ஆசை. எப்படியாவது இந்தக் குரங்கைப் பிடித்துத் தின்று விடவேண்டும்’ என்று அது முடிவுசெய்தது. நந்திரியா அந்த முதலயை ஒரு நாள்கூடப் பார்த்ததில்லை. அது பார்க்க முடியாதபடி, முதலே தாழ்வான இடத்தில் ஒளிந்திருக்கும். குரங்கு தன்னைப் பார்த்துவிட்டால், பயந்துவிடும்; அப்புறம் அங்கு வராது என்பதுதான் முதலேக்குத் தெரியுமே!