பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் திட்டம் இதுதான். தன் இடுப்பில் இருந்த மூங்கில் நுனியைப் பட்ட மரக் கிளையில் கட்டிவிட்டால் போதும்; இக் கரைக்கும் அக்கரைக்கும் ஒரு மெல்லிய பாலம் அமைந்து விடும். அது போதுமே ஆல்ை, அது போட்ட திட்டத்தில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. மரக்கிளையில் கட்டும் அளவுக்கு மூங்கில் நீளமாக இல்லை. ஒரு மீட்டர் குறைவாகப் போய்விட் டது! நந்திரியா இடுப்பிலிருந்து எட்டிப் பிடித்துக்கொண் டிருந்த உடல் பகுதி அந்த இடைவெளிக்குச் சரியாக இருந் தது. இடுப்புடன் சேர்த்துக் கட்டியிருக்கும் மூங்கிலே அவிழ்த்து விட்டால், அதன் முனே மறுபடியும் எதிர் கரைக்குப் போய் விடும். அப்புறம் மீண்டும் அடியிலிருந்து வேலையைத் தொடங்கவேண்டும். என்ன செய்வது என்று யோசித்தது. அதே சமயம் தீவிலே பலமான கூச்சல் கேட்டது. வில் வீரர் கள் விடிவதற்குள் வேட்டையைத் தொடங்கி விட்டார்கள். இனி வேறு வழியில்லே. தன் உடலேயே பாலத்தின் ஒரு பகுதி யாகப் பயன்படுத்துவதுதான் வழி என்று தீர்மானித்தது!