பக்கம்:ரோஜாச் செடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மீரா சொன்னதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே “அப்படியானால் இந்தப் பரிசு உனக்கு இல்லை” என்று சொன்னார் மந்திரி.

மீராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

காரணம் என்ன தெரியுமா ? நீ சொன்ன மாதிரி அறைக்குள்ளேயே இந்தச் செடி இருந்திருந்தால், சூரிய வெளிச்சம் இல்லாமல் கெட்டுப் போயிருக்கும். அத்துடன் நீ தினமும் பத்துப் பதினைந்து தடவை தண்ணிர் ஊற்றினதாகச் சொன்னாயே, அப்படி ஊற்றியிருந்தால் அழுகிப் போயிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/16&oldid=482531" இலிருந்து மீள்விக்கப்பட்டது