இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பரிசைக் கையிலே வாங்கியதும் நேராக மீராவிடம் ஒடினாள் பார்வதி. “இந்தா, நீ என் அம்மாவிடம் கொடுத்த ஐந்து ரூபாய்” என்று கூறி அவள் கையிலே ஐந்து ரூபாயைத் திணித்து விட்டு, வேக வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.
மீதம் உள்ள நாற்பத்தைந்து ரூபாயையும் அம்மாவிடம் சேர்க்கத்தான் அவள் அப்படி அவசரம் அவசரமாக ஒடினாள்.