கொடுத்துவைக்கவில்லை. உம், யாருக்கு இருக்கிறதோ அதிர்ஷ்டம்!” என்றாள் மீரா.
உடனே கமலாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “மீரா, நீ கவலைப்படாதே நான் சொல்லுகிறபடி செய். நிச்சயம் உனக்குத் தான் பரிசு” என்றாள்.
“என்ன ! பரிசு எனக்கா அது எப்படி ?” என்று கேட்டாள் மீரா,
“நாலாவது தெருவிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறதே, அதற்குப் பக்கத்திலே ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் குடிசையிலே பார்வதி என்று ஒருத்தி இருக்கிறாள். அவளும் காந்தி இலவசப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறாள். ஏழாவதிலே படிக்கிறாள். அவளை எனக்குத் தெரியும். நேற்று அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் ஒரு ரோஜாச் செடி வளர்த்திருக்கிறாள். அடடா ! எவ்வளவு அழகான செடி! எவ்வளவு ரோஜாப் பூக்கள்! அவள் வீட்டுக்கு நாம் இப்போதே போவோம். ஏதேனும் துட்டுக் கொடுத்தால் அவள் அந்தச் செடியைத் தந்து விடுவாள்....”
“உண்மையாகவா ! எவ்வளவு ரூபாய் கேட்பாள் ? பத்துருபாய் கேட்பாளா ?”
“பத்து ரூபாயா? அம்மாடியோ! அவ்வளவு எதற்கு? ஒரு ரூபாய், இரண்டு ருபாய் கொடுத்தாலே போதும்.”