பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

49

"அம்மணியம்மா, நான் பின்ன போயிட்டுவாரேன். காரு அந்தப் பக்கம் போகுதாம். அதைச் சொல்லத்தான் வந்தேன்” என்று நிற்கிறாள் வடிவு.

“என்னா அவ்வளவு பறப்பு?”

“இல்லே அம்மணிம்மா, வீட்ல ஏகப்பட்ட வேலை கெடக்குது, அண்ணன் வண்டியனுப்பிச்சது வந்தேன். நாம இல்லேன்னா மடிமடியா அல்லாம் கொள்ளை போயிடும்.”

“சரி, பின்னென்ன, நாஞ்சொல்றது? போயிட்டுவா...”

“அதான் அண்ணியக் கூட்டிட்டுப் போலான்னு கேக்க வந்தேன்...”

மைத்ரேயி அவசரமாக, “நான்...இங்கேயே இருக்கிறேனே....?” என்று அம்மணியைப் பார்க்கிறாள்.

“ஆமா, அதென்னமோ மெரண்டுவந்தாப்போல இருக்கு. நாலு நாள் போகட்டுமே ? கூட்டிட்டுப்போயி வச்சுக்க...”

அம்மணியம்மாளை நன்றி ததும்ப நோக்குகிறாள் மைத்ரேயி.

மாலை நாலடிக்கும்முன் அந்தப் பெரிய வீடு வந்தவர் களெல்லாம் போய் வெறிச்சென்றாகிறது. அம்மணியம்மா கால்களையும் கைகளையும் பரப்பிக் கொண்டு துரங்குகிறாள்.

பகல்பொழுது நழுவி இருளென்னும் குகையில் தஞ்சமடைகிறது. வீட்டில் பணியாளரின் அரவம் கூடத் தெரியவில்லை. மைத்ரேயி கொல்லைக்கும் வாயிலுக்குமிடையே உள்ள நடைகளில் புகுந்து புறப்பட்டு, உட்கார்ந்தும் எழுந்தும் பொழுதைத் தள்ளுகிறாள். அம்மணியம்மா கவலையின்றி இன்னமும் உறங்குகிறாள். இரவுக்கு யாரும் வரமாட்டார்களா ? சமையல் சாப்பாடென்று ஒன்றும் கிடையாதா? மாலைநேரக் காப்பியைக்கூட மறந்துபோய் விட்டாளா ?

மாடிக்கு ஏறிப்போகலாமா என்று ஒரு ஆவல் அவளை முன்னே தள்ளுகிறது. ஊடே ஒரு இனமறியாத அச்சம். பாதிப்படிகள் ஏறும்போது கீழே அம்மணியம்மாளின் குரல் பெரிதாகக் கடுமையாகக் கேட்கிறது.

“வந்திட்டானா அவன் ?”

ரோ.இ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/51&oldid=1101051" இலிருந்து மீள்விக்கப்பட்டது