பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மரணதண்டனை கொடுமையான அநீதியே!

ருஷ்யாவின் தென் பகுதியிலே உள்ளது சாகஸஸ் என்ற மாநகர். படிப்பை முடித்து விட்ட டால்ஸ்டாயின் மூத்த சகோதரர் நிகோலஸ் அந்நகர் ராணுவத்திலே பணியாற்றி வந்தார். 1851-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்தக் கிராமத்திற்கு தனது தம்பியைப் பார்க்க வந்திருந்தார்.

தம்பி டால்ஸ்டாய் எந்த வேலையும் செய்யாமல் வீட்டோடு விரக்தியாக இருப்பதை நிக்கோலஸ் கண்டார். நடனம், நாடகம் என்று தலைகால் தெரியாமல் அவர் மூழ்கிக் கிடப்பதையும், மிருகங்களை வேட்டையாடிக் கொன்று கொண்டிருப்பதையும், அளவுக்கு மீறிய இன்ப கேளிக்கைகளில் மிதந்து கொண்டிருப்பதையும் அவர் நேரிலே பார்த்தார். வேதனைப் பட்டார்! டால்ஸ்டாயின் மனம் கெட்டுப் போனதையும் உடல் சீரழிந்ததையும் கண்டு மனம் குன்றினார்!

டால்ஸ்டாயின் இந்தத் தீய குணங்களையும், அவரது தீய நண்பர்களின் தொடர்புகளையும் ஒழித்து அவரை எவ்வாறு திருந்துவது என்று யோசித்த போது அவரது தமையனார் ஒரு முடிவுக்கு வந்தார். நிக்கோலஸ் விடுமுறை கழிந்து மீண்டும் ராணுவ சேவைக்குப் போகும். போது டால்ஸ்டாயைத் தன்னுடன் காக்கசஸ் மலைப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு போனார்.