பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 107 ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கவில்லை, அவர்களுக்கு அந்த வாய்ப்பு கட்டாயமாக அளிக்கப்பட்டு இருகக வேண்டும். - சட்டசபைக் கூட்டம், அதற்குச் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு அழைப்பு அனுப்புவது குறித்து அரசியல் அமைப்புச் சட்டம் 208 (1)பிரிவின்படி இயற்றப்பட்ட தமிழ்நாடு. சட்டமன்றப் பேரவை விதிகள் என்ன கூறுகின்றள. - அதிகாரம் 2 விதி 3, பேரவை கூட்டுதல் பற்றிக் கூறுகிறது. அது வருமாறு, (அ) பேரவையை ஆளுநர் கூட்டும் போதெல்லாம், பேரவைக் கூட்டத்துக்கான நாள், நேரம், இடம் ஆகிய வற்றைக் குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றினை அரசிதழில் வெளியிடவேண்டும். (ஆ) செயலாளர் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் பேரவைக் கூட்டத்திற்கென குறிக்கப்பெற்ற நாள், நேரம், இடம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். . . மேலும், பேரவைக் கூட்டம் குறுகிய முன்னறிவிப் புடனோ அல்லது அவசரமாகவோ கூட்டப்பெரின்ஒவ்வொரு உறுப்பினர்க்கும் தனித்தனியே அழைப்பாணைகள் அனுப் பப்பெற வேண்டுவதில்லை. ஆனால், கூடும்தாள் இடம் ஆகியவற்றை அரசிதழிலும், செய்தித்தாள்களிலும் வெளி யிட வேண்டும். மேலும் உறுப்பினர்களுக்குத் தந்தி மூல. மாகவோ அல்லது வேறு வகையிலோ தெரிவிப்பதோடு வானொலி வாயிலாகவும் தெரிவிக்க வேண்டும். Shall be informed' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. . ஒரு உறுப்பினர். ஒரு குற்றச்சாட்டின் பேரில் அல்லது ஒரு குற்றம் செய்ததற்காகக் கைது செய்யப்பெற்றாலும் , அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு நீதிமன்றத்தினால் சிறை தண்டனை விதிக்கப் பெற்றாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/102&oldid=888790" இலிருந்து மீள்விக்கப்பட்டது