பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. இறைவன் இருக்கும் இடம் கடவுள் எங்கே இருக்கின்றார்: - கதிர்காமத்திலயும், மற்றத் தலங்களிலுமா கடவுள் குடிகொண்டுள்ளார்? - இல்லவே இல்லை என்கிறது சுவையான ஆங்கிலக் கவிதை ஒன்று! - கடமைகளைச் சரிவரச் செய்பவன் ஒருவன் தேவதூதள் ஒருவரைச் சந்திக்கின்றான். அச்சமயத்தில் தேவதூத கையிலே ஒரு புத்தகம் இருக்கின்றது. - "அப் புத்தகம் என்ன” எள்று தேவதூதனை அவன் கேட்கிறான். ' f 'கடவுளை நித்தமும் வணங்குபவர்களின் பெயர்ப் பட்டியல்தான் அது” என்கிறார் தேவதூதர். . "அப்படியா என் பெயர் அப்புத்தகத்தில் உண்டா? பார்த்துச் சொல்வீர்களா?' என்று அம்மனிதன் கேட் கிறான். - - "பொறுத்துக்கொள்! பார்த்துச் சொல்லுகின்றேன்" என்று சொன்ன தேவதூதன், கையில் இருந்த பெயர்ப் பட்டியலைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு 'உன் பெயர் இதில் இல்லையே” என்றார். - ".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/91&oldid=889034" இலிருந்து மீள்விக்கப்பட்டது