பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

4 வடநாட்டுத் திருப்பதிகள்

ஒரு குளத்தில், ஒருவர் நீராடுங்கால் கங்கை, கங்கை என்று உச்சரித்தாலே அவர்தம் பெருப்பெருத்த பாவங். களையெல்லாம் ஒழிக்க வல்லது கங்கை நதி(1); கங்கை முதலில் ஓங்கி உலகளந்த உத்தமனாகிய எம்பெருமானின் திருவடியை நான்முகன் தன் கமண்டல நீரால் கழுவிப் பாத பூசை செய்ததனால் அவன் கையிலும், எம்பெருமான் திருவடியிலும் தொடங்கி, அந்நீர் கங்கையாகப் பெருக் கெடுக்கும்போது அது பசுமை நிறமுடைய திருத்துழாயை யும், பின்னர் அது சிவபெருமானின திருச்சடையில் தங்கி இழிந்ததால் கொன்றை மலரையும், மலை வழியாக இழிந்ததால் பல்வேறு வகை இரத்தினங்களையும்” கொண்டு ஓடுகின்றது (2, 3): இமயமலை முதல் கடலில் கலக்கும் வரையில் அதன் இரு கரைகளிலும் உள்ள உலக மக்கள் ஆரவாரித்துக்கொண்டு நீராடுவதனால் அவர்தம் பாவங்களையெல்லாம் போக்கும் பெருமையுடையது (4): நிராடுவோரின் எழுபிறப்புகளிலும் திரண்ட பாவங்களைக் கணநேரத்தில் போக்கும் தன்மையது(5); அருந்தவ முனிவர்கள் தாம் மேற்கொண்ட வேள்வி முடித்த பிறகு, வேள்வியின் முடிவில் செய்ய வேண்டி நீராடலைச் செய்ய (அவப்பிரதம் என்ற நீராடல்) அதனால் வேள்வி நிலத்திலுண்டான கலப்பை முதலிய எல்லாத் துணைக் கருவிகளையும் அடித்துக்கொண்டு வரும் சீர்மையது(6); தேவேந்திரன் பட்டத்து யானையாகிய ஐராவதத்தின் மதநீரும், இளந் தேவமாதர்கள் நீராடுவதால் அவர்

4. நான்முகன் எம்பெருமானின் திருவடியைக் கழுவுங்கால் அந்த பூரிபாத தீர்த்தம் கங்கையாகப் பெருக்கெடுத்து ஆகாய கங்கையாக உம்பருலகத்தில் நின்றது. சூரியகுலத் தோன்றலாகிய பகீரதன் என்ற மாமன்னன் கபிலமுனிவரின் கண்ணின் சினத்தீய்க்கு இலக்காகிஉடலெரிந்து சாம்பராகி நற்கதி இழந்த அறுபதினாயிரம்-சகரபுத்திரர்கள் நற்கதி பெரும்பொருட்டு நெடுங்காலம் தவமியற்றி, மேலுலகத்திலிருந்து பூமிக்குக் கொணர்கையில் அவனது வே ண் டு ேக | ள ர ல் சிவபெருமான் அந்நதியைத் தன் முடி மீது ஏற்றுச் சிறிது சிறி த க பூமியில் விட்டனன் என்பது புராண வரலாறு.