ః வடவேங்கடமும் திருவேங்கடமும் டாள் பக்தியையும் சீர் துர்க்கினால், பெரியாழ்வார் பக்தி அணுள்ளவிலும் ஆண்டாள் பக்தி மலையளவிலும் தோன்ற நிலைக்குக் காரணம் என்ன? இருடிகளின் பக்தி சொந்த முயற்சியால் வளர்த்துக் கொண்டது. ஆழ்வார் கள் எம்பேருமானால் கயர்வத மதிநலம் அருளப் பெற்று, சம்சார உலகினின்றும் எழுப்பப் பெற்றவர்கள். பெரியாழ் வார் பொங்கும் பரிவால், எம்பெருமானுக்குத் திங்கு வராமல் மங்கள சாசனம் செய்தவர். ஆண்டாள தானே சென்று எம்பெருமானை எழுப்பித் தன் குறையை அறிவித் தவள். ஆடவன் ஆடவன்ைக் கண்டு நட்புக் கொள் வதைக் காட்டிலும் நங்கை நம்பியைக் கண்டு நட்புக் கொள்வது புள்ள படையாக இருக்கும். வேங்கடத்தெம்மான்மீது காதல் : ஆண்டாள் திருமலையப்பன் பால், மேகத்தைத் துர்துவிடுவதாக அமைத்த நாச்சியார் திருமொழியிலுள்ள பதிகம் ஒன்று அன்னையாரின் கழிபெருங்காதலைக் காட்டுகின் தது. துதுப் பாடல்களும் பிரபந்தங்களும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளாகும். இயம்புகின்ற காலத்து எகினம் கிள்ளை பயம்பெறு மேகம்பூ லைபாங்கி-நயந்தகுயில் பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம்ஈ ரைந்துமே துர்துரைத்து வாங்கும் தொடை. [எகினம்-அன்னம்; பிரமரம்-வண்டு) என்ற இரத்தினச் சுருக்கப் பாடலால் துTதுவிடுவதங்குரிய பொருள்கள் இன்னவை என்பது அறியப்படும். இவற்றுள் மேகமும் ஒன்று. இவையெல்லாம், i.j; ;