#86 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்னை உன் திருவடிகளில் சேரும்படி செய்தருள வேண் டும்' என்கின்றார். ‘உலகம் உண்ட பெருவாயா': ஆபத்து நேர்ந்த காலத்தில் தளராதபடி காப்பதற்காகவன்றே நீ உலகம் உண்டது. அந்த ஆபத்தில் காக்கும் தன்மை மெய்யா னால் என்னையும் அந்த ஆபத்தினின்றும் எடுத்தருளித் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டாவோ?-என் பது குறிப்பு, பெறுவாயா: வாயின் பெருமையைச் சொன் னது அவனது பாரிப்பின் பெருமையைச் சொன்னபடி. "அடியேன் ஆருயிரே - திருமலையில் நின்று என் னுடைய சேஷத்துவமுறையை அறிவித்து உன்னால் அல்லது செல்லாதபடி பண்ணினவனே! குலதொல் அடியேன் குலபரம்பரையாக நான் உனக்கு அடிமைப் பட்டவனன்றோ? என்னை நீ நோக்காவிடில் வேறு தோக்குவாருண்டோ? கூறாய்': அ டி யே ன் உன் திருவடியைச் சேரும் வகைபற்றி ஒரு சொல் அருளிச் செய்ய வேண்டும். சரண்யனின் இரண்டாவது படி: கூடக் கடவீர்; அதற்கு ஒரு குறையும் இல்லை; ஆனாலும் தடைகள் கனத்து இருக்கின்றனவே என்று எம்பெருமான் கூற, "கேமி வலவா! உன் கையில் திருவாழி இருக்க நீ இப்படிச் சொல்லலாமோ? இரண்டு விபூதியையும் ஆளுவது நின் திருவாழியன்றோ? அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும். அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும். தெய்வக் கோமானே! எல்லாத் தெய்வங்கட்கும் மேம்பட்ட தெய்வம் நானே' என்பதைத் திருமலை யில் காட்டிக் கொண்டு நிற்பவனே. ஆரா அன்பில் அடியேன். ஆராக் காதல் குருகூர்ச் சடகோபன் அன்றோ? இப்படிப்பட்ட அடியேன். நின் திருவடிகளில் சேர்ந்து
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/218
Appearance