உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠巒疊 வடவேங்கடமும் திருவேங்கடமும் ہج۔ திருவடிகளைக் காண்பதற்குச் சாதன அதுட்டான மின்றியிருந்தாலும் உன்னையொழிய ஆற்றமாட்டேன். இந்த முடைய ஆகிஞ்சத்யத்தை (=கைம்முதல் இல்லா மையை) முன்னே வைத்து ஒருவித சாதனத்தைச் செய்து பெறலாம் படியன்றோ நீ இருப்பது?’ என்கின்றார் ஆழ் வார். இங்கே நம்பிள்ளை ஆச்சரியமாக அருளிச் செய்வது; "ஒரு வாணாசுரனுடைய போரில் தோற்றுப் போனதால் இங்கனம் லந்து விழுவார்கள். இராசத தாமத குணங்கள் தலையெடுத்தபோது ஈசுவரோஹம்" என்று இருப்பார் கள். முட்டினவாறே கிருஷ்ண கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாக வும், புருஷோத்தமனாகவும் அறிவேன் என்று துதி செய் யத் தொடங்குவார்கள். (மூவரும் தனித்தனியாகவே சொல்லுவது). மேலும் இவர்கள் தத்தம் மணாட்டிமார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படம் (=வறுமைக்குச் சூசகமான உடை) கட்டிக் கொண்டு விழத் தொடங்கு வார்கள். இதனால் எம்பெருமானுக்கு இரக்கம் எழும் என்பது இவர்கள் கருத்துப் போலும் (8). ஒன்பதாம் படி: ஆழ்வார் தம்முடைய பிரிவுத் துன் பத்தைக் கணக்க அருளிச் செய்கின்றார். தாம் விரும்பிய போதே காணப்பெறாமையாலே இப்போதே உன்னைக் கானாவிடில் தரிக்க மாட்டேன்’ என்கின்றார். செந்தா மரைக்கண் செங்கனிவாய் நாற்றோள் அமுதே! எனதுயிரே! சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே! அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே (9) (சிந்தாமணி ஒருவகை இரத்தினம், பகர்-ஒளி; அல்-இருட்டு இறை சிறிது பொழுது! என்பது பாசுர ப் பகுதி.