பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛諡盛 வடவேங்கடமும் திருவேங்கடமும் கள் எண்ணற்றவை என்பதும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பரமன் உளன் என்பதும் அவவண்டங்கட்கெல் லாம் மேலுள்ளது தான் 'பரமபதம்’ என்பதும் அறியத் தக்கலை அடுத்த பாடலிலும் (6) பரமபதம் அந்தரத் வலியுறுத்தப் பெறுகின்றது. இன்

தான் சார்பு : னொரு பாடலில், -வானேறித் திமுகனா கத்திருப்பார் சேவடிக்கா ளானவரைக் காமுகனா கத்திருப்பார் காப்பு (22) (வான்-பரமபதம்; நாகம்-ஆதிசேடன்; ஆள் ஆனவர் அடிமைப்பட்டிருப்பவர்; திருப்பர்செல்லவி.ாதவர்; காப்பு-பாதுகாக்கும் இடம்). என்ற அடிகளால் வைகுந்தத்தை இருப்பிடமாகவுள்ள எம்பெருமான் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின் நான் என்பதைப் புலப்படுத்துகின்றார் அய்யங்கார் எம்பெருமானின் திருமேனி: வைணவ தத்துவப்படி எம்பெருமானுக்கு உருவம் உண்டு என்பதும், அது திவ் விய மங்கள விக்கிரகம்’ என்று வழங்கப்பெறும் என்ப தும் தரம் அறிந்தவை. அவன் நீல மேகத்தின் நிறத்தையு டையவன் (12, 33). அவன் காயாம்பூவண்ணத் தனாகவும் சொல்லப் பெறுவான் - புதுப் பூவை வண்ணத் தான்' (56). நான்முகன், சிவபெருமான் என்னும் இரு தேவர் களையும் தன் திருமேனியில் வைத்திருப்பவன்- போதன் சிவன் என்னும் மற்றிருவர் அங்கத்தான்' .17). தன் கையில் கதை, வாள், அம்புகள் பொருந்திய வில், திருச் சங்கு, திருவாழி ஆகிய ஆயுதங்க ளத் தாங்கியருப்பவன் (72) 'அகலகில்லேன் இறையும் என்று கூறும் அவர்மேல் மங்கையைத்-பெரிய பிராட்டியாரைத் - திருமார்பில் கொண்டிருப்பவன (39).